Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது!

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே அவரவர்களின் பணியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதனால் காலை உணவிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவ்வாறு காலை உணவை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உருவாகிறது. அந்த அல்சரை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

தேவைப்படும் பொருள்: சோற்றுக்கற்றாழை. ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை கட் பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள வெண்மை நிறம் கொண்ட ஜெல்லை மட்டும் எடுத்து பாத்திரத்தில் வைத்து நன்கு கழுவிக்கொள்ள வேண்டும்.

அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அல்லது நன்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டிய அதனை மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்து குடித்து வந்தால் அல்சர் முற்றிலும் குணமாகும். இதனை குடிப்பதன் மூலம் முடி வளர்தல், உடம்பில் உள்ள சூடு முற்றிலும் தணிந்து விடும், குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் நீங்கும்.

 

Exit mobile version