Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தயிர் மட்டும் இருந்தால் போதும்! இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு!

தயிர் மட்டும் இருந்தால் போதும்! இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு!

அன்றாடம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் தயிரின் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

ஜீரண சக்தி

தற்போது உள்ள காலகட்டத்தில் பல்வேறு விதமான உணவுகளை நாம் உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணவுகள் எளிதில் செரிமானமாக மூன்று அல்லது ஐந்து டீ ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வாயு பிரச்சனைகள் தீரும். மேலும் தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. அதனால் அதனை நாம் உட்கொள்ளும் பொழுது வயிற்றுப் புண்கள் சரியாகும்.பிறகு கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

வயிற்றுப் பிரச்சனைகள் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுடன் சிறிதளவு தயிர் சேர்த்து உட்கொள்ளும் பொழுது மலச்சிக்கல் நீங்கும்.மேலும் வயிற்றுப்போக்கு குணமடைய தயிரை நீருடன் கலந்து பருகினால் வயிற்றுப்போக்கு குணமடையும்.

நம் உடலில் உள்ள நுண்கிருமிகளை நீக்குவதற்கு பாலை தயிராக மாற்ற உதவும் பாக்டீரியாக்கள் உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் அளித்து பாதுகாக்கின்றனர். தயிரை நாம் அதிக அளவு சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version