Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள்!

கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள்!

கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள்!

கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள்

அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது பயிர்களை நாசம் செய்வதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது. மனித நாகரிகத்தின் வளர்ச்சி, மனிதன் காட்டை ஆக்கிரமித்து பல கட்டிடங்களை எழுப்புவதன் காரணத்தினாலும் காட்டு யானைகள் வேறுவழியின்றி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லை ஒட்டிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அமைந்திருக்கும் பெங்களூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது எங்கு 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது யானை கூட்டங்கள் அங்கு முகாமிடுவது வழக்கமாகியுள்ளது.

வாகனம் மூலம் நெடுஞ்சாலை வழியாகக் கொண்டுசெல்லப்படும் கரும்புகளை குறிவைத்து யானைகள் முகாம் இடுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version