கேரளா ஸ்டைல் “மேங்கோ புளிசேரி” – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்..!!
கேரளா மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்று புளிசேரி. அதிலும் மாங்காய், தயிர், மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் புளிச்சேரி கேரள மக்களின் பேவரைட் ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*மாங்காய் – 1
*தயிர் (புளிப்பில்லாதது) – 3/4 கப்
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு:-
*தேங்காய் துண்டுகள் – 4
*சீரகம் – 1 தேக்கரண்டி
*பச்சை மிளகாய் – 2
*அரிசி மாவு – 1 1/2 தேக்கரண்டி
*தனி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தாளிக்க:-
*கடுகு – 1 தேக்கரண்டி
*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
*குண்டு மிளகாய் – 3
*கறிவேப்பிலை – 2 கொத்து
*தேங்காய் எண்ணெய் – 2 1/2 தேக்கரண்டி
*தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:-
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், சீரகம், அரிசிமாவு, மிளகாய்த்தூள், தண்ணீர் சிறிது சேர்த்து மைய அரைக்கவும். அரைத்த தயிருடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
கனிந்த மாம்பழத்தை சுத்தம் செய்து பிளேட்டில் பெரிய துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் விட்டு சூடேற்றவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள மாங்காய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
மாங்காய் பாதி வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பை அணைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் மேல் 1 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி இறக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயில் வைத்து அதில் 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் கடுகு, வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் அடுப்பை அணைக்கவும். இந்த தாளிப்பை தயார் செய்து வைத்துள்ள புளிசேரியில் கலந்து விடவும்.