Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்!

மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்!

தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் வாழ்வாதாரம் மற்றும் உடைமைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் கூறினார்.

கோவை மேட்டுப்பாளையம் அருகே 4 வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார்.

மேலும் கன மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். இதேபோல் கடலூரில் சுவர் இடிந்து உயிரிழந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறினார்.பலத்த மழையால் கடந்த 29-ம் தேதி சுவர் இடிந்து உயிரிழந்த 3 பேருக்கு இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவ கேரள அரசு தயாராக இருக்கிறது என பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார். மேலும் மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது எனவும் கூறினார்.

Exit mobile version