கல்லீரலை பாதுகாக்கும் திரிபலா பொடி… உடல் எடையை கூட மின்னல் வேகத்தில் குறைக்கும்!!

0
178
கல்லீரலை பாதுகாக்கும் திரிபலா பொடி… உடல் எடையை கூட மின்னல் வேகத்தில் குறைக்கும்…
திரிபலா என்று அழைக்கப்படும் மூலகை பொடியானது எல்லா காலத்திலும் மருத்துவதற்கு பயன்படும் முக்கியமான பொருளாக உள்ளது. இந்த திரிபலா பொடி உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தும் தன்மையுடையது. இந்த திரிபலா பொடியானது நம்முடைய முன்னோர்கள் அனைவரும் அவர்களுடைய வீடுகளில் வைத்திருந்த ஒரு பொடியாகும்.
திரிபலா பொடி என்பது ஒன்றுமில்லை. நெல்லிக்காய் பொடி, கடுக்காய்ப் பொடி, தான்றிக்காய் பொடி இவை மூன்றையும் கலந்த கலவைதான் திரிபலா பொடி ஆகும். இந்த திரிபலா பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
திரிபலா பொடியை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம். நெல்லிக்காய் 4 பங்கும், தான்றிக்காய் 2 பங்கும், கடுக்காய் ஒரு பங்கும் எடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் இவை மூன்றையும் ஒன்றாக அரைத்து பொடியாக்கி கொண்டால் திரிபலா பொடி தயார். பொதுவாக இந்த திரிபலா பொடியை இரவில் 5 கிராம் சாப்பிட்டால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றது.
திரிபலா பொடியின் பயன்கள்…
* திரிபலா பொடியை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை குணமடைகின்றது.
* திரிபலா பொடியை சாப்பிடுவதால் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிரித்து முதுமையை தள்ளிப் போடுகின்றது.
* இந்த திரிபலா பொடி நமது வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவுகின்றது.
* திரிபலா பொடியை எடுத்துக் கொள்வதால் வயிற்றில் இருக்கும் புண்கள் ஆறிவிடுகின்றது. இதனால் அல்சர் பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
* திரிபலா பொடியை சாப்பிடுவதால் செரிமானம் தொடர்பான பிரச்சனை குணமடைகின்றது.
* உடலில் உள்ள சர்க்கரை அளவை இது கட்டுப்படுத்துகின்றது.
* திரிபலா பொடி இதயத்தை காக்கும் தன்மை கொண்டது.
* இந்த திரிபலா பொடி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரித்து ரத்தத்தையும் சுத்தம் செய்கின்றது.
* கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளையும் இந்த திரிபலா பொடி சரி செய்து கல்லீரலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றது.
* கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கின்றது.
உடல் எடையை குறைக்க…
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் 1 ஸ்பூன் அளவு இந்த திரிபலா பொடியை போட்டு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் இந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீராக வரும் வரை காய்ச்ச வேண்டும். பின்னர்.அதில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையத் தெடங்கும்.
மழை காலங்களில் திரிபலா பொடியை சுடுநீரிலும், குளிர் காலங்களில் நெய் சேர்த்தும், பனிக்காலங்களில் தேன் கலந்தும், கோடை காலத்தில் சாதாரண நீருடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.