காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு!

0
140
Lover who stopped his girlfriend's wedding in cinematic style! Police registered a case!

காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு!

சென்னை நெடுஞ்செழியன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி என்ற பெண்ணிற்கும் மணிகண்டன் என்பவருக்கும் குடுபத்தினர் முன்னிலையில் நேதாஜி  நகரில் உள்ள முருகன் கோவிலில் இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கோவிலுக்கு வந்த சதீஷ் என்பவர் ரேவதியை காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தினார். அப்போது ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர்  சதீஷ் என்பவரை பிடித்து அடித்துள்ளார்.

அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து போளிசர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் கோவிலுக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் ரேவதி மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் வண்ணாரப்பேட்டையில் உள்ள நகை கடையில் ஒன்றாக வேலை செய்து வந்தனர் என்பது தெரியவந்தது.அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.அதனால் திருமணம் நடக்கவுள்ளது தன்னை அழைத்து செல்லுமாறும் சதீஷ் என்பவருக்கு ரேவதி குறுஞ்செய்தி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.