Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!!

#image_title

நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!!

முதலில் சாதாரணமாக உருவாகும் சளி நாளடைவில் நுரையீரலில் கோர்த்து கெட்டி சளியாக மாறி விடுகிறது. இதை முழுவதுமாக கரைத்து தள்ள வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு மூலிகை கசாயம் செய்து குடிங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு 1/4 ஸ்பூன்
2)துளசி 10 இலைகள்
3)எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
4)தேன் 1 தேக்கரண்டி
5)வெற்றிலை ஒன்று

செய்முறை:-

ஒரு வெற்றிலை மற்றும் 10 துளசி இலையை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி அளவு மிளகை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதன் பின்னர் அதில் இடித்த வெற்றிலை மற்றும் துளசி சேர்க்கவும்.

தொடர்ந்து இடித்த மிளகு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும். இந்த கசாயத்தில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கிய சளி அனைத்தும் கரைந்து மலம் வழியாக வெளியேறும்.

Exit mobile version