மீண்டும் திருமணம்.. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்தில் வந்த சிக்கல்!!

0
152
Marriage again.. Dhanush and Aishwarya's divorce problem!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகததால் வழக்கை அடுத்த மாதம் ஒத்திவைத்துள்ளனர்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 18 வருட திருமண பந்தத்தை முடித்துக் கொள்ளப்போவதாக இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களின் விவாகரத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இருவரும் குழந்தைகளுக்காக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சேர்ந்துதான் காணப்படுகின்றனர்.

இந்த அறிவிப்பு வந்து சில தினங்களிலேயே அவர்களது மகன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றாக சென்று கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது. தற்பொழுது குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களது வழக்கானது நிலுவையிலும் உள்ளது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அதுக்கு பின்னணியில் பல காரணம் சொல்லப்பட்டது. இவர்கள் இருவரும் மீண்டும் இணையப் போவதாகவும் சமரசம் பேச உள்ளதாகவும் கூறினர். இதனை நிரூபிக்கும் வகையில், தனுஷும் அவரது மனைவி போடும் போஸ்டுகளுக்கு லைக் போட்டும் வந்தார். தற்பொழுது இரண்டாவது முறையாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த வழக்கை நீதிபதி, வரும் நம்பர் மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இதை வைத்து பார்க்கையில் இவர்களுக்கு விவாகரத்து பெற விருப்பமில்லை. குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ நினைப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேற்கொண்டு இவர்கள் விவாகரத்து பெறவில்லை என்றால் இருவரும் சேர்ந்து 2 வது முறையாக திருமணம் செய்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.