அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமாண்ட ஊர்வலம்

0
121

அயோத்தியில்  ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்டமாக கோவில் கட்டுவது பற்றி பல்வேறு சட்ட சிக்கலுக்கு பிறகு உறுதியானது. 2019 நவம்பரிலே கோவிலை கட்டலாம் என ஆணை பிறப்பித்தது. மத்திய அரசு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்துள்ளது.  இந்த அறக்கட்டளை  தலைமையில் அனைத்து பணிகளும்  தீவிரமாக நடந்து வருகின்றன.

ஆகஸ்டு 5-ந்தேதியான இன்று கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் அந்த வகையில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் பலரும் இந்த பூஜையை கொண்டாடும் விதமாக வாஷிங்டனில் கேபிடல் ஹில் பகுதியில் ஊர்வலம் வருகின்றனர்.