Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை!

இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவை பொறுத்தவரையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது.ஆனால் அதற்கு முக்கிய காரணமாக, சொல்லப்பட்டது அண்மையில் நடைபெற்ற தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் தான் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது

அந்த வகையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 28 காசுகளும். டீசல் ஒரு லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version