Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Medical student who died due to Selby tragedy! Shock to parents!

Medical student who died due to Selby tragedy! Shock to parents!

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக எதுவெல்லாமோ செய்கிறார்கள், அவர்களின் மகிழ்சிக்காக. ஆனால் பிள்ளைகளோ அற்ப விசயத்திற்காக தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

நடைபயிற்சி மேற்கொண்டால் அதைமட்டும் செய்ய வேண்டியது தானே. செல்பி எடுக்க வேண்டியதுதான், அதற்காக மேலே ஏறி தான் எடுக்க வேண்டுமா என்ன? சகோதரன் அருகில் இருக்கும் போதாவது எடுத்து இருக்கலாம். ஆனால் என்ன செய்வது தற்போது உயிர் போய் விட்டதே.

மத்திய பிரதேச மாநிலத்தில், இந்தூரில் உள்ள சிலிகான் சிட்டியில் இருப்பவர் நேஹா அர்சி. 22 வயதான இவர் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

தனது சகோதரன் சவுரவ் உடன் இந்த பெண்ணும் ஒரு பாலத்தின் ,மீது நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது தனது சகோதரனிடம் தனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

எனவே அவர் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்த நேரம் அந்த பெண் செல்பி எடுக்க பாலத்தின் சுவர் மீது எறி நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி அங்கிருந்து கீழே விழுந்து விட்டார்.

இதில் நேஹாவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நேஹாவின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செல்பி மோகத்தினால் மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version