சுவாமி நித்யானந்தா மீது மீரா மிதுனுக்கு இப்படி ஒரு விருப்பமா?பகிரங்க பதிவு!

0
99

சில பிரபலங்கள் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தான் எப்படியாவது மக்களிடம் வைரல் ஆக வேண்டும் என்னும் எண்ணத்தில் முன்வந்து சர்ச்சைகளில் சிக்கி வலைத்தளங்கள் முழுவதும் அவர்களது பெயர்கள் சுழல வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவ்வகையில் மாடல் அழகி மீரா மிதுன் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

இவர் விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்று நெகட்டிவ் சர்ச்சைகளுக்கு உள்ளாகி தனது பெயரை தானே தாழ்த்திக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் அவர் பங்கு பெற்ற நடன ரியாலிட்டி ஷோவிலும் தன்னுடன் நடனமாடும் ஆண் நபர் மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்தார். அப்பொழுது ஷோவின் ஜட்ஜாக இருந்த நடிகை சங்கீதா அவருக்கு தக்க பதிலடி கொடுத்து வெளியே அனுப்பினார். அதைப்போல் பிக்பாஸிலும் இயக்குனரும் நடிகருமான சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்தார் . அதற்கு ரசிகர்களும் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் இவர் இப்பொழுது சமூகவலைதளங்களில் இளையதளபதி விஜய்,நடிகர் சூர்யா, நடிகை திரிஷா அவர்களை அவதூறாக பேசிய வீடியோக்கள் சமூக ஊடங்களில் வைரல் ஆகி வருகிறார். இதற்காக ரசிகர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் வார்த்தைகளால் விலாசப்படுகிறார்.

இந்நிலையில் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளுடன் சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்தியானந்தா, தனி அதிபராக தான் இருக்கும் போகும் “கைலாசா” எனும் நாட்டை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் பரப்பி உள்ளார். இதனை தொடர்ந்து அவர் தான் அதிபராக உள்ள கைலாசா நாட்டிற்கு என தனியாக ரிசர்வ் வங்கி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் அதற்கான காசோலை படங்களையும் இணையதளங்களில் வெளியிட்டு உள்ளார்.


என்னதான் சாமியார் நித்யானந்தா தன்னை பற்றி சீரியஸான தகவல்களை வெளியிட்டு வந்தாலும் மக்கள் அதனை கலாய்த்து நகைச்சுவையாகவே எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபலமடைய வேண்டும் என்னும் எண்ணத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இணையதளங்களில் பல பதிவுகளை செய்துவரும் நடிகையும் சூப்பர் மாடலுமான நடிகை மீரா மிதுன் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார். என்னவென்றால் “நீங்கள் அனைவரும் சுவாமி நித்தியானந்தாவை கலைத்தும்,அவரை அவதூறாக பேசியும் , வருகின்றனர். ஆனால் நான் அவரது கடின உழைப்பால் உருவாக்கபட்ட கைலாச நாட்டிற்கு செல்ல விரும்புகிறேன். இதனை நெட்டிசன்கள் விடாமல் கலாய்த்து வருகின்றனர்.