Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்கவுண்டர் செய்த போலீசார் படங்களுக்கு பாலாபிஷேகம்: இது கொஞ்சம் ஓவர் தானோ?

என்கவுண்டர் செய்த போலீசார் படங்களுக்கு பாலாபிஷேகம்: இது கொஞ்சம் ஓவர் தானோ?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்லூரி மாணவிகள் சிலர் தங்கள் கல்லூரி வளாகத்தில் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகளின் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுவரை நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே கட் அவுட் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்து வந்த இளைஞர்கள் தற்போது சமூக விழிப்புணர்ச்சி அடைந்து என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கும் பாலாபிஷேகம் செய்து வருவதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு பொதுமக்களும் சமூக வலைதள பயனாளிகளும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் போலீசாருக்கு பெரும் பாராட்டுகளை தெரிவித்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரியின் புகைப்படத்திற்கு ஒரு கல்லூரி மாணவிகள் பாலாபிஷேகம் செய்து வந்ததை கொஞ்சம் ஓவர்தான் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Exit mobile version