Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!

நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறுவார்கள். அதற்கு ஏற்ப நாம் உண்ணும் காய்கறிகள் பழங்களில் நமது வியாதிகளை குணப்படுத்தும் மருந்து உள்ளது.

அவர் நமது அனைவர் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்புகளின் ஒரு அருமருந்து அவரைக்காய் தான்.

அவரைக்காயை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்துக் கொள்வதால், கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு அதற்கான சத்து கிடைக்கும்.

அவரைக்காயின் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுப்பெறும். மேலும் பித்த நோய் இருப்பவர்களும் அவரைக்காய் சாப்பிடலாம்.

அதுமட்டுமின்றி அவரைக்காய் கண் நரம்புகளுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும். அதிக அளவு கணினி உபயோகிப்பவர் கட்டாயம் உணவில் அவரை காய் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பார்வை தெளிவடைவதுடன் வெள்ளெழுத்து குறைபாடுகள் முற்றிலும் நீங்கும்.

இதோடு அவரை ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஓர் நல்ல மருந்து. ஏனென்றால் இதில் துவர்ப்பு சுவை உள்ளது. அதனால் இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை உடையது.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் அவரை கை சேர்த்துக் கொள்ளலாம். இது ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அவரைக்காய் பொரியல் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் விரைவில் தீர்வு காண முடியும்.

அதேபோல சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காய் சாப்பிடுவதால் சர்க்கரை நோயால் ஏற்படும் தலை சுற்றல் சரியாகும்.

Exit mobile version