Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தண்ணீருடன் இதை ஒரு ஸ்பூன் கலந்து குடியுங்கள் ஹீமோகுளோபின் பிரச்சனையே வராது!!

#image_title

தண்ணீருடன் இதை ஒரு ஸ்பூன் கலந்து குடியுங்கள் ஹீமோகுளோபின் பிரச்சனையே வராது!!

இரத்த சோகை என்பது இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் ஆகும். ஹீமோகுளோபின் ஆக்சிஜனை நுரையீரலிருந்து உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. ஆக்சிஜன் மனித உயிருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வந்தால் உடல் சீராக இருக்காது மற்றும் பல்வேறு பிரச்சினை உண்டாகும்.
ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க கால்சியம் இரும்புச்சத்து போன்றவை மிக முக்கியமான ஒன்றாகும்.

இதனை கவனிக்காமல் விடுவதால் கடுமையான இரத்த சோகை நோய் உண்டாகும்.மேலும் சைவ உணவைக் காட்டிலும் அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.

இதன் அறிகுறிகள் உடல் சோர்வு, இரும்புச்சத்து குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்றவையாகும். இதனை சரி செய்வதற்கு கீரைகள் போன்றவை சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர்
முருங்கைக் கீரை
கருவேப்பிலை
நெல்லிக்காய் பொடி
தேன்

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதன்பின் முருங்கைக் கீரையை அதில் சேர்த்து கொள்ளவேண்டும். மேலும் அதனுடன் கருவேப்பிலை சேர்த்து நன்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதனை வடிகட்டி டீ போன்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் நெல்லி காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும். மேலும் அதனுடன் தேன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இதனை காலையில் சாப்பிட்ட பின் குடித்து வந்தால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாது. மேலும் குறிப்பாக 30 வயது மேல் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் இதனால் இதுபோன்று செய்து குடித்து வந்தால் உடல் சோர்வு ஹீமோகுளோபின் குறைபாடு போன்றவை ஏற்படாது.

இது மட்டுமின்றி புது இரத்தம் அதிகரிக்க உதவுகிறது. மேலும் முருங்கைக் கீரை மற்றும் கருவேப்பிலையில் இரும்புச்சத்து உள்ளதால் கண் பார்வை உடல் சோர்வு போன்றவை குணமாகும். நெல்லிக்காய் பொடியில் விட்டமின் சி இருப்பதால் உடல் வலி போன்றவை ஏற்படாது.

Exit mobile version