Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பலத்த எதிர்ப்பை அடுத்து மோடியின் கலந்துரையாடல் தேதியில் மாற்றம்?

பள்ளி மாணவர்கள் எந்த வித மன அழுத்தம் இன்றி தேர்வுகள் எழுதும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வருடம்தோறும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார் அந்த வரிசையில் இந்த ஆண்டு வருகிற 16-ஆம் தேதி கலந்துரையாடல் நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

இதில் கலந்துகொள்ளும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறப்பு கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்தியிருந்தது மேலும் இதில் கலந்து கொள்வதற்காக வருகிற 16-ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயமாக வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 16ஆம் தேதி விடுமுறை என்பதால் அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை கிளப்பியது.

அதே போல் வட இந்தியாவில் மகரசங்கராந்தி இருப்பதால் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தன் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version