காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !..

0
135
More than a hundred terrorists infiltrated the Kashmir border!..The army commander froze in shock!..

காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !..

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.இந்திய ராணுவத்தின் வடக்குப் பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவிவேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று நடைபெற்ற இரண்டு நாள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அதன்படி அவர் கூரியதாவது காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு குறுஞ்செய்தி கிடைத்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் முழுக்க இன்று காலை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.அந்த வேட்டையில் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியே ஊடுருவுவதற்காக 200 பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர்.

இதனிடையில் பாரமுல்லா மாவட்டம் வானிஹம் பாலா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு ஈடாக பதில் தாக்குதல் நடத்தி வந்தனர்.

துப்பாக்கிச்சண்டை நடைபெறும் பகுதியில் 200 மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 11 முதல் 12 மாதங்களாக போர்நிறுத்த ஒப்பந்த புரிதல் மிக நன்றாக வேலை செய்கிறது. நடப்பு ஊடுருவல் விகிதம் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுவுள்ளது என தெரிவித்துள்ளார்.கூடிய விரைவில் பயங்கரவாதி அனைவரையும் பிடித்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.