சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக இளைஞர் பலி!

0
140
Motorcycle head-on collision in Salem district! Tragically young victim!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக இளைஞர் பலி!

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (38). இவர் ஊரில் தொழில் செய்து வருகிறார். சேகர் நேற்று முன்தினம் வலசை ஊரில் இருந்து வீராணத்துக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தார் அதே பகுதியில் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (34) என்பவரும் வீராணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சின்னூர் பகுதியில் சென்ற போது இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்து நேர்ந்தது.

மேலும் இதில் படுகாயம் அடைந்த சேகர், சசிகுமார் ஆகியோரை பக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் சேகர் என்பவரை பரிசோதத் தேர்வில் இவர் சிறிது நேரத்திற்கு முன்பே இறந்து விட்டதாகவும் கூறினார்கள். சசிகுமாருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றார்கள் இந்த விபத்து குறித்து வீராணம் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு நிலவி வந்தது.