Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் திறப்பு..!! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் இன்று முதல் அருங்காட்சியங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அதன்படி நவ. 30ம் தேதி வரை ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் திரையரங்குகள் திறப்பு, அருங்காட்சியகம் திறப்பு போன்றவற்றிற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட அருங்காட்சியகங்களை இன்று முதல் மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில்,

அருங்காட்சியகங்கள் துறையின் 21 மாவட்ட அருங்காட்சியகங்கள், சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் ஆகியவை திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

Exit mobile version