திமுகவை எச்சரித்த அதிமுக நிர்வாகி! கடும் அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
99

தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்து இருக்கிறது. அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த இடத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கக்கூடிய முக்கிய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதேபோல அவர்களுடைய ஆதரவாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி அதிமுகவின் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஆதரவாளர் ஒருவர் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அந்த சமயத்தில் அவர் பேசிய சில விஷயங்கள் பரபரப்பை உண்டாக்கியது.கோவை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்கிற பொறுப்பில் இருந்து வரும் சந்திரசேகர் என்பவர் திமுகவின் வேட்பாளரை கறி சமைத்து போடுவோம் என்கிற ரீதியில் பேசி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறார்.ஏற்கனவே திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தொடர்பாக தவறான கருத்துக்களை தெரிவித்தது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியது.

இப்போது அதிமுகவை சார்ந்த ஒரு நிர்வாகி திமுகவிற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்கிற ரீதியில் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.திமுகவை சார்ந்தவர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்கிற ரீதியில் ராசா விவகாரம் தமிழக அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை உண்டாக்கியது.

ஆனால் தற்சமயம் அதிமுகவை சார்ந்த ஒரு நிர்வாகி இவ்வாறு பேசியிருப்பது அனைவரையும் யோசிக்க வைத்திருப்பதாக சொல்கிறார்கள்0 அதோடு இவர் அமைச்சர் வேலுமணியின் வலதுகரம் என்று சொல்லப்படுகிறார் என தெரிகிறது.எது எப்படியோ தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி, எந்த விஷயத்திலும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்று தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.