Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு!

NIA case against 13 arrested in Bangalore rape case

NIA case against 13 arrested in Bangalore rape case

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு!

பெங்களூருவில் நடந்த வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டு இருந்தார். மேலும் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கி, அதனை வீடியோவாக  எடுத்து வெளியிட்டும் இருந்தார்கள். அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு ராமமூர்த்தி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி கண்டு பிடித்து, தகவல்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்தது. இந்த செய்தி நமது சேனலிலும் வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு பெண்கள் உட்பட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பெங்களூர் கோர்ட்டில் ராமமூர்த்தி நகர் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணை கற்பழித்ததால், கைதான 11 பேர் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அங்கிருந்து பெண்களை கடத்துவது, இந்தியாவில் உள்ள இளம் பெண்களை கடத்தி விற்பனை செய்வது, விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விவகாரத்தை மத்திய உள்துறையினர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.  இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு என்.ஐ.ஏ  உள் துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பெயரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு குறித்து போலீசாரிடம் தகவல்களைப் பெற்றனர். கைதான 13 பேருக்கும் இந்தியாவில் பல பகுதிகளிலுல் இளம்பெண்களை கடத்தி விற்பனை செய்வதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்களுக்கு எழுப்பியுள்ளது.

அத்துடன் கைதானவர்கள் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்து இந்த சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கும் வாய்ப்பு உள்ளதால், அது குறித்தும் விசாரித்து வருகின்றனர். கைதான 13 பேர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இளம் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை கடத்தி விற்பனை செய்தது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version