Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரம்! யூடியூபர் மணிஷ் காஷ்யப் க்கு எதிரான வழக்கை ரத்து முடியாது – தமிழ்நாடு அரசு பதில் மனு

#image_title

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரம்! யூடியூபர் மணிஷ் காஷ்யப் க்கு எதிரான வழக்கை ரத்து முடியாது – தமிழ்நாடு அரசு பதில் மனு

வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் மணிஷ் காஷ்யப்புக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து முடியாது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்.

இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப் தாக்கல் செய்தார் மனுவை உச்சநீதிமன்றம் சற்று நேரத்தில் விசாரிக்க உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்.

வெறுப்பை விதைக்கும் வகையில் போலியான செய்திகளின் அடிப்படையில் வீடியோக்களை யூடியூபர் மணிஷ் காஷ்யப் மாற்றி அமைத்துள்ளார்.

இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட வீடியோக்களை பின்னணியாகக் கொண்டு, தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

வேற்றுமையையும், விரோதத்தையும் வளர்க்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே திட்டமிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.

எனவே அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட
வழக்கை ரத்து செய்ய முடியாது என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

Exit mobile version