Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?..

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான  அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?..

மூளையைத் தாக்கும் ஒரு நோய்தான் வலிப்பு நோய் என்கிறோம். அதாவது மூளையில் ஏதாவது ஒரு காரணத்தினால் உண்டாகிற அதீத அழுத்தத்தால் வேகமாக மின்சாரம் போல் உற்பத்தியாகி நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை ,கால்கள் உதறத் தொடங்குகின்றன.இதுதான் வலிப்பு என்று கூறுகிறோம். பரம்பரை தலையில் அடிபடுதல் பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு மூளையில் கட்டி ரத்தக்கசிவு ரத்தம் உறைதல் கிருமித் தொற்று மூளைக் காய்ச்சல் மூளை உறை அழற்சி காய்ச்சல் டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும். சர்க்கரை நோய் விபத்து போன்ற காரணங்களால் வலிப்பு நோய் உண்டாகும்.

மைய நரம்பு மண்டலத்திற்கு இழைக்கப்படும் சேதங்களால் ஏற்படும்.பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள் அல்லது சிராய்ப்புகளால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.சிலருக்குப் பிறப்பின் போதே இருக்கும் நரம்புமண்டலக் குறைப்பாடு.விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்கள், மூளையில் ஏற்படும் கட்டிகள்,ஆல்கஹால் போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் பாதித்தல் மூளைக் காய்ச்சலால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.

Exit mobile version