ஓ.டி.டி. ரீலிஸ்க்கு படங்கள் ரெடி! குடும்பத்தோடு பார்க்கலாம்!

0
88
OTT Images Ready for Release! Check it out with the family!

ஓ.டி.டி.  ரீலிஸ்க்கு படங்கள் ரெடி! குடும்பத்தோடு பார்க்கலாம்!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவின் பொருளாதார நிலை அதல பாதாளதிற்க்கு சென்று கொண்டு இருக்கிறது.பொது மக்களின் நிலையோ அதற்கு மேல் உள்ளது.

தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.அனைத்து மால்கள், தியேட்டர்கள் என கூட்டம் சேரும் இடங்கள் அனைத்தும் அரசின் உத்தரவால் மூடப்பட்டு உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.

கடந்த ஒரு வருடமாகவே இதே நிலை தொடர்ந்தாலும், வருட கடைசியில் சில தளர்வுகள் பிரப்பிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது. ஆனாலும் திரைத்துறையினரும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

எனவே நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வந்த பொன்மகள் வந்தாள் முதல் ஓ.டி.டி. திரைப்படம் ஆகும்.இதன் மூலம் தியேட்டர் உரிமையாளர்களுடன் சில, பல கருத்து மோதல்கள் வந்தாலும் நிலைமையை அனைவரும் ஏற்று கொண்டனர்.

அதே போல்  தமிழில் சூரரை போற்று,  பூமி, மூக்குத்தி அம்மன், பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி. யில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதே போல் தனுஷ் நடிப்பில் ஜெகமே தந்திரம் படம் அடுத்த மாதம் வெளி வர உள்ள நிலையில், மேலும் மூன்று படங்கள் வெளி வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதை தொடர்ந்து நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் வெளிவருவதாக அதிகார பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன.

நரகாசுரன் படம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி நடிக்க தயாராகி உள்ளது. இந்த படம் பண பிரச்சினைகளால் நீண்ட காலமாக முடங்கி கிடக்கிறது. வாழ் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அருவி படம் மூலம் பிரபலமான அருண் புருஷோத்தமன் இயக்கி உள்ளார். எப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷால், கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ளனர்.