Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பழனிச்சாமி தானா பதவி விலகணும்!.. இல்லனா அசிங்கமாயிடும்!.. ஓபிஎஸ் காட்டம்!..

eps

ஜெயலலிதாவின் குட் புக்கில் எப்போதும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். அதனால்தான் தான் இரண்டு முறை சிறைக்கு சென்றபோதும் முதல்வர் பதிவியை அவரிடம் கொடுத்து சென்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பும் முதல்வர் பதவி பன்னீர் செல்வத்துக்கே வந்தது. ஆனால், சில விஷயங்களில் சசிகலா தரப்பு சொன்னதை ஓபிஎஸ் கேட்கவில்லை. எனவே, அவரை நேரில் அழைத்து மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது சசிகலா தரப்பு. அதோடு, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சிகள் நடந்தது.

இதையடுத்து ஜெ.வின் சமாதிக்கு சென்று தியானம் செய்ய துவங்கினார் ஓபிஎஸ். அதோடு, சசிகலா தரப்பு என்ன செய்ததோ அதை செய்தியாளர்களிடமும் சொல்லிவிட்டார். எனவே, அதிமுகவில் 2 அணி உருவானது. கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களை தங்க வைத்து பேரம் பேசியது சசிகலா தரப்பு. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிக்கலா.

eps
eps

அதன்பின் பின் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் மோதல் துவங்கியது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி அரசியல் செய்து வந்தார். மேலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்கள் நடந்து எடப்பாடி தரப்புக்கு தலைவலியை கொடுத்தது. ஆனால், பாஜகவின் முயற்சியில் பழனிச்சாமி – ஓபிஎஸ் இருவரும் இணைந்தார்கள். பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால், டம்மியாக உணர்ந்த ஓபிஎஸ் மீண்டும் குடைச்சலை கொடுக்க அவரை கட்சியிலிருந்தே தூக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்னும் ஒரு வருடத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்திருக்கிறார்

Exit mobile version