பத்திரிக்கையாளர் பனிமலருக்கு நிர்வாண படத்தை அனுப்பிய பிரபலம்! சர்ச்சையை கிளப்பும் பனிமலர்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பல்வேறு சேனல்களில் பணியாற்றிய பனிமலர் தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.
கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்தவரான பனிமலர் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வாங்கி தனியாக வசித்து வருகிறார். பெரியார்வாதியான இவர் சமீபத்தில் ஒரு முறை பெரியார் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்திருப்பேன் என கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் சாதி மறுப்பு மற்றும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இவர் பதிவிடும் கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சாராரையே விமர்சனம் செய்து வருவதால் அந்த தரப்பினர் இவருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்து பதிவிடுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
சமீபத்தில் பெண்கள் தங்கள் பணிபுரியும் இடங்களில்தங்களுக்கு நேர்ந்த பாலியல் சம்பந்தமான அச்சுறுத்தல் மற்றும் கொடுமைகளை மீடு நிகழ்வின் மூலம் சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுவெளியில் வெளியிட்டு வந்தனர். அப்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் தான் பணியாற்றிய நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் மீது குற்றம் சுமத்தியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த குற்றசாட்டானது அப்போதுகடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றுமொரு குற்றசாட்டை பனிமலர் அவருடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது அவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பல நாட்களாக ஒருவர் தொடர்ந்து நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார் இதனையடுத்து அவரின் பெயரை குறிப்பிடாமல் பொதுவெளியில் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். முகநூலில் பதிவிட்டுள்ளதில் அவர் கூறியுள்ளதாவது.
ஆண்கள் நிர்வாணப் படம் அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ், எங்களுக்கு அருவருப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை. இயல்பிலேயே ஆண்களின் உடல் பார்த்து மயக்கம் ஏற்படும்படி பெண்கள் உருவாக்கப்படவில்லை என படித்திருக்கிறேன்(விதிவிலக்குகள் இருக்கலாம்). உங்கள் உறுப்பு ஆண்மை இல்லை என்ற தெளிவு எங்களிடம் இருக்கிறது, அதைத்தாண்டி தன்னுடைய செயல்களால் பேராண்மை மிக்க ஆண்கள் பலரை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், அதில் எல்லோரிடமுமே நாங்கள் காதல் கொள்வதோ, கலவி கொள்வதோ இல்லை, அப்படி இருக்க நீங்கள் லிஸ்டிலேயே இல்லை. ஒழுக்கமும், நற்செயல்களுமே ஒருவரை ஈர்க்கும், அநாகரிகம் ஈர்க்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நபர் யார் என பலரும் அவரிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இதுவரை பனிமலர் இதை அனுப்பியது யார் என்பது பற்றி எதையும் குறிப்பிடவில்லை என்பதால் அது பெரிய இடமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்நிலையில் இது உண்மையா அல்லது விளம்பரத்திற்காக அவரே கிளப்பி விட்டதா என்ற வகையிலும் பலர் இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்