ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! விநாயகர் சிலை வைப்பதற்கு தடையா?
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபி ஆர். டி. ஓ அலுவலகத்தில் ஆர். டி. ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அப்போது திடீரென இந்து முன்னணி நிர்வாகிகள் புதிய இடங்களில் தமிழக அரசு விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிப்பதை கண்டித்து ஆர். டி. ஓ. அலுவலகம் முன்பு விநாயகர் சிலைகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர்களாகவே அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.