மக்களே எச்சரிக்கை!! இதோ இந்த 10 அறிகுறிகள் இருந்தால் உங்கள் சிறுநீரகம் செயலிழந்து விடும்!!

0
149
#image_title

மக்களே எச்சரிக்கை!! இதோ இந்த 10 அறிகுறிகள் இருந்தால் உங்கள் சிறுநீரகம் செயலிழந்து விடும்!!

நம் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீரையும் நச்சுக்கழிவுகளையும் வெளியேற்றக் கூடிய மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம். மாறிவரும் வாழ்க்கை முறை, மற்றும் உணவு முறை காரணமாகவும் கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களினாலும் சிறுநீரகம் பாதிப்படைகிறது. சிறுநீரகம் பாதிப்படையும் போது உடலில் தேவையில்லாத நச்சுக்கள் வந்து சேர்கிறது. இவ்வாறு நடைபெறும் பொழுது சிறுநீரக செயலிழந்து விட்டது என்று சொல்கிறோம். பொதுவாக சிறுநீரக செயலிழப்பு எந்த காரணங்களில் வருகிறது என்று பற்றி பார்க்கலாம்

முதலில் திடீர் உடல் குறைவு. ஒரு மனிதன் அவருடைய எடையிலிருந்து 10-15 கிலோ 20-25 நாட்களில் குறைகிறது என்றால் ஆரம்பகட்ட சிறுநீரக செயலிழப்பதற்கான அறிகுறி. என்றால் சிறுநீரகம் பாதிப்படையும் போது உடலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான சத்துக்களான புரதச்சத்து சிறுநீரக வழியாக வெளியேறும். இதனால் உடல் எடை வெகு விரைவில் குறையும். இதனுடன் பசியின்மை சுவையின்மை போன்ற காரணங்களை நாளிலும் உடல் எடை குறையும்.

இரண்டாவதாக, வாய் துர்நாற்றம் மூச்சு விடும் பொழுது ஒரு விதமான கெட்ட நாற்றம் உண்டாகும். சிறுநீரகம் செயலிழக்கும் போது உடலில் இருக்கக்கூடிய யூரியா என்ற நச்சு பொருள் அதிகமாக இருக்கும். இது வாயில் உள்ள உயிர்களுடன் சேர்ந்த அமோனியாக மாற்றப்பட்டு கெட்ட நாற்றம் ஏற்படுத்தும்.

மூன்றாவதாக, இரத்த சோகை, சிறுநீரகம் செயலிழக்கும் போது எரித்ரோ பாய்ண்டின் உற்பத்தி குறைந்து விடும். இதன் விளைவாக புதிய ரத்த செல்கள் உற்பத்தியாவது குறைந்துவிடும். இவ்வாறு நடைபெறுவதால் ரத்த சோகை உண்டாகும். ரத்த சோகைக்காண அறிகுறி என்னவென்றால் உடல் சோர்வு, அசதி, மயக்கம், எந்த வேலை செய்வதற்கும் மனநிலை இல்லாமை போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

நான்காவதாக, சிறுநீரக பிரச்சனைகள் உள்ளது என்றால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேறுவது குறைந்து விடும். இதேபோன்று தோல் அரிப்பு, தோள்களில் தேவையற்ற சதை வளர்ச்சி, தோல் நோய்கள் போன்றவை வர வாய்ப்புள்ளது.

ஐந்தாவதாக, மூச்சு விடுவதில் சிரமம் அதிகம் உண்டாகும். ஏனென்றால் சிறுநீரகம் சரியாக வேலை செய்யாமல் போகும்போது உடலில் கழிவுகளும், அதிகப்படியான தேவையற்ற நீரும் வெளியேற்ற முடியாமல் உடலிலே தேங்க ஆரம்பிக்கும். அதுவே குறிப்பாக நுரையீரலில் போய் தேங்கும் பொழுது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

ஆறாவதாக, சிறுநீரகம் சரியாக வேலை செய்யாமல் போகும்பொழுது உடல் வீக்கம் ஏற்படும். அதிகபடியாக கை, கால் வீக்கம் ஏற்படும்.

ஏழாவதாக, சிறுநீரகம் அமைந்திருக்கக்கூடிய முதுகிற்கு மேல் புறமும் அல்லது கீழ் புறமோ ஒரே இடத்தில் அதிகப்படியான வலி இருக்கிறது என்றால் சிறுநீரக செயல்களுக்கான அறிகுறிகள். முதுகு வலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் மாத கணக்கில் வலி இருந்து கொண்டே இருக்கிறது என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.

எட்டாவதாக, கண்களைச் சுற்றி வீக்கம். சிறுநீரகம் பாதிக்கப்படும் போது உடலில் உள்ள புரதம் அதிகப்படியாக சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். இதன் விளைவாக உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகுதல் கண்களில் வீக்கம் ஏற்பட்டு சிறுநீரக பிரச்சனைக்கு அறிகுறியாக வெளிப்படும்.

ஒன்பதாவதாக, சீரற்ற ரத்த அழுத்தம், இந்த பிரச்சனையில் ரத்தக்குழாய்கள் அதிக படியாக விரிந்து சுருங்க ஆரம்பிக்கும். உடலில் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் போது நெப்ரான்ஸ்கள் எளிதில் பழுதடையும். இதனால் சிறுநீரகப் பதிவுகள் உள்ளது என்பதை அறியலாம்.

பத்தாவதாக, சிறுநீரில் மாற்றம், சிறுநீர் அதிகமாக வெளியேறுவது மற்றும் சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறுவது போன்ற பிரச்சனைகள், அடிக்கடி சிறுநீர் வருவது போன்று உணர்ச்சிகள் தோன்றுவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ரத்தப்போக்கு, சோப்பு நுரை போன்று நுறைத்து பொங்குவது, சிறுநீரில் கெட்ட வாடை வீசுவது இது போன்ற காரணம் மூலமாகவும் சிறுநீர் பாதிப்படையும் என்று தெரிந்து கொள்ளலாம்.