பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA

0
149

பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் இராமலிங்கம், கடந்த பிப்ரவரி மாதம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாம் மதமாற்ற முயற்சியை இராமலிங்கம் தட்டிக்கேட்டதால் கொலை நடைபெற்றதாக இந்து அமைப்புகளின் கடுமையான அழுத்தம் காரணமாக 11 நபர்களை திருவிடைமருதூர் போலீசார் கைதுசெய்தனர்.

இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், கொச்சியை சேர்ந்த ஏ.எஸ்.பி. சவுகத் அலி தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் ரெஹ்மான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்ஹாதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹாசன் ஆகிய 6 பேரை தேடப்படும் நபர்களாக என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு எதிராக, கைது வாரண்ட் பிறப்பித்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள், இவர்கள் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.