Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பரபரப்பாக சிறுவனை தேடும் காவல் அதிகாரிகள்! மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ?

police-officers-looking-for-the-boy-frantically-the-little-girl-who-died-without-the-benefit-of-medical-treatment

police-officers-looking-for-the-boy-frantically-the-little-girl-who-died-without-the-benefit-of-medical-treatment

கனடாவில் சிறுவனை தேடும் காவல் அதிகாரிகள்…டாக்ஸி சாரதி ஒருவரை சுட்டுக் கொலை சார்ந்த குற்றத்துக்காக 17 வயது சிறுவனை ரொறன்ரோ காவல் அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை என்னவென்றால், ரொறன்ரோவை சேர்ந்த சிறுவன் ஒருவன் இவர் பெயர் ஏசாயா ட்வைமன் வயது 17 இச்சிறுவன் டாக்ஸி சாரதி என்ற பெண்ணை கொலை செய்த காரணத்திற்க்காக கனடாவில் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்ய உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், ட்வைமன் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தாலும் அவரை அடையாளம் காண நீதித்துறை அங்கீகாரம் கொடுத்துள்ளது என காவல் அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, குறித்த நபர் கையில் பல ஆயுதம் வைத்திருப்பவராகவும், வன்முறை குணம் கொண்டவராகவும், ஆபத்தானவராகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என காவல் துறையினர் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

எனவே , பொதுமக்கள் அவரை அடையாளம் காண நேர்ந்தால், உடனே அவரிடம் நெருங்காமல் 911 இலக்க எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என தகவல் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 24ம் தேதி மாலை, டாக்ஸி சாரதி பெண் ஒருவர் சாலையோர வேலியில் மோதியதாக காவல் நிலையத்திற்கு தகவல் ஓன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து, பார்மசி அவென்யூ மற்றும் எக்லின்டன் அவென்யூ கிழக்கு பகுதிக்கு அதிகாரிகள் விசாரிக்க சென்றிந்தனர்.

இதனையடுத்து, துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் குன்றும் கொலை உயிருமாக மீட்கப்பட்ட நபர் யார் என்று வியந்து பார்த்தால் வயதான பெரியவர் ஒருவர் உடல் சேதமடைந்து காணப்பட்டார். பின்பு விசாரணைக்கு பின் இவர் பெயர் கிறிஸ்டோபர் ஜங் வயது 73 என காவல் அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்தனர்.

மேலும், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சாரதி, மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்

Exit mobile version