Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி!

#image_title

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி!

மணல் கடத்தல் தடுப்பு சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கியமான பணிகளை செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நெல்லையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி.

வரும் மே பத்தாம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் துறை ஆணையாளர் அலுவலகத்தை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை சங்க நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் முருகையன்வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே பத்தாம் தேதி சென்னை சேப்பாக்கம் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப் போராட்டம் நடத்துவதற்கான முடிவு செய்யப்பட்டு, அதற்கான பிரச்சார பயணத்தை மாநில முழுவதும் வருவாய்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

வருவாய் துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது. முதுநிலை பெற்ற அலுவலர்களுக்கான பணியிறக்கம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு 9 மாதங்களைக் கடந்தும் இந்த பிரச்சனை தொடர்பான அரசு எந்த ஆணைகளும் வழங்கப்படாமல் உள்ளது.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மே 10ஆம் தேதி மாநில முழுதும் உள்ள வருவாய் துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சனையின் மீது கவனம் கொண்டு மக்களின் பணிகள் பாதிக்காத வண்ணம் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்தின் காரணமாக நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், சட்டம் ஒழுங்கு பணிகள்,சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு ,மணல் கடத்தல் தடுப்பு பணிகள் போன்ற முக்கியமான பணிகளை செய்யும் வருவாய் துறை அலுவலர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

Exit mobile version