Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ் ரசிகர்களைக் கடுப்பாக்கிய சுஹாசினியின் பேச்சு… பொன்னியின் செல்வன் ப்ரமோஷனில் உளறல்

தமிழ் ரசிகர்களைக் கடுப்பாக்கிய சுஹாசினியின் பேச்சு… பொன்னியின் செல்வன் ப்ரமோஷனில் உளறல்

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் பணிகளுக்காக ஐதராபாத்தில் படக்குழு சென்ற போது இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி பேசியது தமிழ் சினிமா ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. ஐதராபாத்தில் அவர் பேசிய போது “பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களின் படமாக இருந்தாலும், அது உங்களின் படம்தான். ஏனென்றால் தமிழகத்தில் 10 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் நடந்தது. ஆனால் அதிகளவில் ஐதராபாத்திலும் ராஜமுந்திரியிலும்தான் நடந்தது. அதனால் இது உங்களின் படம்தான்” எனப் பேசியுள்ளார்.

சுஹாசினியின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் சுஹாசினியின் இந்த பேச்சுக்கு கடுமையான எதிர்வினையாக ட்ரோல்களையும் மீம்களையும் பகிர்ந்து வருகின்றன. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகும் நிலையில் இது தேவையில்லாத எதிர்மறை எண்ணத்தை படத்தின் மேல் உருவாக்கியுள்ளது.

இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Exit mobile version