Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் ஊரங்கு உத்தரவை மத்திய அரசுப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நாளை காலை 11மணிக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவர்கள் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

கொரோனா பாதிப்பைச் சரிசெய்யும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்துக்கொண்டப் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதனால் நாளை மாநில முதல்வர்களிடம் அவர்கள் மாநிலத்தில் எத்தனைப் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது மாநிலத்தில் எந்தெந்தப் பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளது என்பது பற்றிக் கேட்டறிவார் எனத் தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரைன்சிங் மூலம் நடத்தப்படுகிறது.

நாளை காலை 11மணிக்கு பிரதமர் அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களோடு கொரோனா பாதிப்பைப் பற்றி ஆலோசனை நடத்துவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version