மகளின் கண் முன்னே உயிர் விட்ட தயாரிப்பாளர் வி.ஏ துரை !!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!
பிரபல சினிமா தயாரிப்பாளர் வி.ஏ துரை அவர்கள் உடல் நலம் குறைவு காரணமாக நேற்று(அக்டோபர்2) இரவு அவருடைய வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் தான் தயாரிப்பாளர் வி.ஏ துரை அவர்கள். இவர் நடிகர் சத்யராஜ் நடித்த என்னமா கண்ணு, லூட்டி, விவரமான ஆளு, நடிகர் கார்த்தி நடித்த லவ்லி, நடிகர்கள் விக்ரம், சூரியா நடிப்பில் வெளியான பிதாமகன், நடிகர் விஜய்காந்த் நடித்த கஜேந்திரா ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
மேலும் சினிமாவில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். இவருக்கு சில வருடங்களாகவே நீரிழிவு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் நீரிழிவு நாய்க்கு கடந்த சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
நீரிழிவு நோய் தீவிரம் அடைய இவருடைய இரண்டு கால்களும் அறுவைச் சிகிச்சை செய்து எடுக்கப்பட்டது. இந்நிலையில் வீட்டிலேயே நீரிழிவு நாய்க்கு சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் வி.ஏ துரை அவர்களின் உடல் நிலை மோசமைடந்து வீட்டிலேயே உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
தயாரிப்பாளர் வி.ஏ துரை அவர்கள் இறந்தது குறித்து அவருடைய மகள் “சில மாதங்களாகவே நீரிழிவு நாய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அப்பாவின் இரண்டு கால்களும் அகற்றப்பட்டது. அப்பொழுதும் நன்றாகத்தான் இருந்தார்.
நேற்று(அக்டோபர் 2) இரவு அப்பாவின் உடல் நிலை மோசமைடந்தது. நான் அருகில் தான் இருந்தேன். உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்து காத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அப்பாவுக்கு வலிப்பு மாதிரி இழுத்தது. அதன் பின்னர் அப்பா இறந்துவிட்டார்” என்று கூறினார்.