இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும்! இவர்களுக்கு மட்டும் ஐந்து சதவீதம் தள்ளுபடி!

0
161
Property tax must be paid by this date! Five percent discount only for them!

இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும்! இவர்களுக்கு மட்டும் ஐந்து சதவீதம் தள்ளுபடி!

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளது.இந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் நில உரிமையாளர்களிடம் தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரி,சொத்து வரி ,தொழில் உரிமம் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவது வழக்கம்.அந்த வகையில் நடப்பாண்டில் முதல் அரையாண்டு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

முதல் அரையாண்டில் மட்டும் ரூ 945 கோடி மொத்த வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.நடப்பாண்டில் முதல் அரையாண்டு சொத்து வரி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.இந்நிலையில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

அதனையடுத்து இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் ஐந்து சதவீதம் தள்ளுபடி செய்து செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.