Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை:! வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை:! வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு,15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் கள்ளக்குறிச்சி,கோயமுத்தூர், நீலகிரி,வேலூர்,திருப்பத்தூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை,
கன்னியாகுமரி திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Exit mobile version