சொன்னால் நம்ப மாட்டீங்க…!! “மருத்துவ பயன்கள் கொண்ட வெல்வெட் பூச்சி”

0
369
#image_title

Red velvet mite tamil: நாம் பல வகையான பூச்சி இனங்களை பார்த்திருப்போம். அதில் ஒரு சில வகையான பூச்சிகள் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், பலவகையான நிறங்களிலும், சில பூச்சிகள் விஷத்தன்மை கொண்டவைகளாகவும் இருக்கும். ஒரு சில பூச்சிகளை நாம் எப்பொழுதாவது தான் காண முடியும் அந்த வகையில் 90ஸ், 80ஸ் கிட்ஸ்களால் அதிகமாக பார்க்கப்பட்ட ஒரு பூச்சி இனம் என்றால் அது இந்த சிகப்பு வெல்வெட் பூச்சி (Red velvet mite) தான்.

மழைக்காலம் வந்துவிட்டால் போதும் இந்த பூச்சிகள் மண்களில் அழகாக சென்று கொண்டிருக்கும். பார்ப்பதற்கு சிகப்பு நிறத்தில் பளபளவென்று அழகாக இருக்கும்.

கிராமங்களில் வளர்ந்த பிள்ளைகள் இதனை கைகளில் பிடித்து எடுத்து வைத்து தீப்பட்டியில் போட்டு வைத்து விளையாடுவார்கள். ஆனால் தற்பொழுது இந்த பூச்சிகளை எல்லாம் நாம் காண முடிவதில்லை.

இந்த சிகப்பு வெல்வெட் பூச்சியை சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. அதனைப் பற்றி இந்த பதிவில் (velvet poochi tamil) காண்போம்.

சிகப்பு வெல்வெட் பூச்சி..!

மழை பெய்து சில நாட்கள் கழித்து இந்த பூச்சிகள் மண்ணில் இருந்து வரும். இந்த பூச்சியை சிகப்பு வெல்வெட் பூச்சி, தம்பலப் பூச்சி, மொட்டை பப்பாத்தி, பட்டுப்பூச்சி, மூதாய் பூச்சி என்று பல பெயர்களில் இந்த பூச்சி அழைக்கப்படுகிறது.

இந்தப் பூச்சியை விவசாயிகளின் நண்பன் என்று கூறுவார்கள். காரணம் இந்த பூச்சிகள் வயல்வெளிகளில் அதிகமாக மழை பெய்த சிறிது காலங்களில் காணப்படும். அப்பொழுது பயிருக்கு தீங்கு விளைவிக்கும் சிறு சிறு பூச்சிகளை இவைகள் அழித்து உண்ணுகின்றன. பார்ப்பதற்கு சிறியதாக இருப்பதால் இந்த பூச்சிகள் எப்படி தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும் என நினைக்கலாம்.

இந்த பூச்சி லார்வாக இருக்கும் பொழுது மற்ற பெரிய பூச்சிகளின் உடம்பில் ஒட்டிக் கொள்ளும். ஒட்டுணியாக ஒட்டிக்கொண்ட இந்த வெல்வெட் பூச்சி லார்வாக்கள் அந்தப் பூச்சிகளின் உடம்பில் உள்ள ரத்தத்தை குடித்து ஓரளவிற்கு வளர்ந்த பிறகு மண்ணில் விழுந்து மழைக்காலம் வரும் பொழுது மீண்டும் பூச்சியாக வெளியே வரும்.

லார்வாக ஒட்டிக் கொள்ளும் பொழுது பயிற்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சி இனங்கள் ஓரளவிற்கு அழிந்து விடுகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய ஒட்டுண்ணியாக உள்ள பூச்சி இந்த சிகப்பு வெல்வெட்டு பூச்சி என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பூச்சி சிலந்தி தேள் வகுப்பை சேர்ந்த பூச்சியாகும். மேலும் இதனை சித்த மருத்துவத்தில் இந்திர கோபம் பூச்சி என்று அழைக்கப்படுகிறது. காரணம் இந்த சிகப்பு வெல்வெட் பூச்சியிலிருந்து திராம்பிடியம் கிராண்டிஸ் என்னும் குறிப்பிட்ட எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த என்னை இந்திய மருத்துவத்தில் முடக்கு வாதம் என்னும் நோய்க்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மண்ணில் இருந்து குறிப்பிட்ட நாட்களில் வெளிவரும் இந்த வெல்வெட் பூச்சி, தற்போது எங்கும் காணப்படுவதில்லை. காரணம் நாம் பல வகையான இரசாயன உரங்களை மண்ணில் தெளிக்கும் போது இந்த இனங்களும் அழிந்துவிடுகின்றன.

மேலும் படிக்க: Ranakalli Ilai: கட்டிப்போட்டால் குட்டி போடும்… கிட்னியில் உள்ள கல்லை நீக்க இந்த ஒரு செடி போதும்..!!