Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிண அரசியல் செய்யும் சீமானுக்கு சமஸ்கிருதம் பற்றி என்ன தெரியும்? எஸ்.வி.சேகர் டுவிட்டரில் பளார்!!

பிண அரசியல் செய்யும் சீமானுக்கு சமஸ்கிருதம் பற்றி என்ன தெரியும்?  எஸ்.வி.சேகர் டுவிட்டரில் பளார்!!

சமீபத்தில் நடிகர் ரஜிகாந்த் துக்ளக் பத்திரிகை நிகழ்வில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் பேச்சானது அமைதியை கெடுக்கும் விதமாக இருப்பதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக  பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், சிலர் எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமஸ்கிருத மொழியை செத்த மொழி என்றி விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் டுவிட்டரில் சீமானை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

பிண அரசியல் செய்யும் சைமனுக்கு சமஸ்கிருதம் செத்தமொழியாக தெரிவதில் ஆச்சரியபடுவதற்கில்லை என்றும், தமிழ்ப்பழமொழி செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் நாய்க்கு தெரியுமா என்று டுவிட்டரில் கடுமையாக பதிவு செய்துள்ளார்.

ராஜராஜ சோழன் போன்ற நாட்டை ஆண்ட மன்னர்கள் முழுமையாக தெய்வத்தின் நம்பிக்கையுடன் இருந்ததால் கோவில்களை கட்டி பராமரித்து வந்தனர். அதன் வழியே நடக்கும் ஆகம விதிகளை மாற்றுவதற்கு கடவுள் நம்பிக்கை இல்லாத எந்த நாதாரிக்கும் உரிமை இல்லை என காட்டமாக கூறியுள்ளார்.

இந்த விசயத்தில் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியும் சீமானை தற்குறி என குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார். இந்த டுவிட்டருக்கு எதிராக சீமானின் தம்பிகளும் எதிர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version