வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! 

0
199
#image_title

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 1 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் திடிரென்று இன்று அதிகாலை கோடை மழை வேதாரண்யம் பகுதியில் 5 செ.மீ மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு பாத்திகள் சேதம் அடைந்து உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சேமித்து வைத்துள்ள உப்பை தார்பாய் கொண்டு உற்பத்தியாளர்கள் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.உப்பு பாத்திகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீண்டும் உப்பு உற்பத்தி துவங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.