Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..?

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..?

திருச்சி மாவட்டம் வடக்கு நாகமங்கலத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகள்
கவிபிரியா. 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கவிபிரியா கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

கவிபிரியாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நாகமங்கலம் அருகே காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மணிகண்டம் காவல்துறை விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் மாணவி கற்பழித்து கொன்றது உறுதியானது. இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இனாம்மாத்தூர் ஊரை சேர்ந்த மதிக்குமார் என்பவருக்கும், மாணவி கவிபிரியாவிற்கும் காதல் இருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், தன்னை தவிர்த்துவிட்டு வேறு ஒருவருடன் பழகியது பிடிக்கவில்லை எனவும், திட்டமிட்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வாக்குவாதம் முற்றிய பிறகு மாணவியை கற்பழித்து தலையில் கல்லைபோட்டு கொன்று துப்பட்டாவால் மூடிவிட்டு மதிக்குமார் தப்பி ஓடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கு பின்னணியில் மதிக்குமாரைத் தவிர வேறு பின்னணி உள்ளதா எனவும், மணிகண்டம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் கொலை
சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version