பள்ளிகளுக்கு விடுமுறை!!வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
175
SCHOOL HOLIDAYS!! IMPORTANT ANNOUNCEMENT ISSUED!!

பள்ளிகளுக்கு விடுமுறை!!வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.வருகின்ற டிசம்பர்-24 ஆம் தேதியுடன் அனைவருக்கும் தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை எப்போது என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து எவ்வளவு நாட்கள் விடுமுறை, மீண்டும் எப்போது பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு
டிசம்பர்-15 ஆம் தேதி முதல் தொடங்கி 23-12-2022 அன்று நிறைவடைகின்றன. 6 முதல் 12
வகுப்பு வரை 15-12-2022 முதல் தொடங்கி 23-12-2022 வரை நடைபெறும் எனவும், 6, 8, 10
மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு காலை நேரத்திலும் 7, 9, 11 வகுப்புகளுக்கு பிற்பகல் நேரத்திலும்
தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கொடுக்கப்பட்ட வழிமுறைகள்
மற்றும் அறிவுரைகளை பயன்படுத்தி தெர்வுகள் நடத்த வேண்டும். என்றும் கூறப்பட்டுள்ளது.

24-ஆம் தேதி தேர்வுகள் முடியவுள்ள நிலையில் வரும் டிசம்பர்-25 கிறிஸ்மஸ் தினத்தில் இருந்து
ஜனவரி-1 ஆங்கில வருடபிறப்பு வரை அரையாண்டு விடுமுறை எனவும் ஜனவரி-2 அன்று
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.