Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘பீச்சுல நின்னு கண்ண மூடி மேல பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்’!! ஷிவானி நாராயணனின் அசத்தலான புகைப்படம்!!

முதல் முதலாக 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் ஷிவானி நாராயணன் நடித்து வந்தார். அதற்கு பின் விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக இவர் அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியில் பகுதி மூன்றின் வாயிலாக அறிமுகம் ஆனார். மேலும், அந்த தொடரில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

மேலும் ஷிவானி அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற தொடரின் மூலமாக ஹீரோயினாக நடித்து இருந்தார். மேலும், ஜோடி அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அவர் பங்கேற்றார்.

அதனை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘இரட்டை ரோஜா’ என்ற தொடரில் ‘அபி’ என்னும் கதாபாத்திரத்தில் மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இருந்தாலும் அவர் தொடரின் பாதியிலேயே வெளியேறி விட்டார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 தமிழ் என்கிற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, தனது திறமைகளை அவருடைய சின்னத்திரை ரசிகர்களுக்கு காட்டினார்.

மேலும், பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டு பல்வேறு பெரும் சர்ச்சைகளை சந்தித்தார். அதனை அடுத்து பாலாஜி முருகதாஸுடன் ஏராளமான காதவரையிலும் ல் சேட்டைகளை செய்தார். அவ்வாறு இருப்பினும் கண்டு கொள்ளாதது போல் தான் இருந்தனர்.

அதன் பின் பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானியின் அம்மா வந்து ஷிவானியை திட்டியது யாராலும் இப்பொழுது வரையிலும் மறக்க முடியாது. மேலும், வெளியே வந்தபின் எப்பொழுதும் போல தனது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது பல புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை உசுப்பேத்தி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் கடற்கரையில் நின்று கொண்டிருந்தது பார்ப்பதற்கு வடிவேலு கூறுவதை போல ரசிகர்கள் கமெண்ட் செய்து கிண்டல் செய்து வருகின்றனர்.

Exit mobile version