ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்!! துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு!!

0
257

Tamilnadu Gov: நியாவிலைக் கடைகளில் துவரம்பருப்பு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்த நாளிலிருந்து ரேஷன் கடைகளில் தேவைக்கேற்ப கையிருப்பு இல்லை என்ற புகார் ஓங்க ஆரம்பித்தது. மேற்கொண்டு இதனை சரி செய்யும் வகையில் தமிழக அரசு பல காரணங்களை கூறினாலும் துவரம் பருப்பு தட்டுப்பாடானது தற்போது வரை இருந்துதான் வருகிறது.

இரு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் துவரம் பருப்பை வழங்கி வருவதாக பலர் கூறி வருகின்றனர். இவ்வாறு புகார் வந்ததை அடுத்து 51,000 டன் துவரம் பருப்பானது கொள்முதல் செய்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் 20 ஆயிரம் டன் மட்டும், வரும் 16ம் தேதிக்குள் இறக்குமதி செய்திருக்க வேண்டுமென சிவில் சப்ளை நிறுவனத்துக்கு ஆணையிட்டது.இதில் ஐந்து நிறுவனங்கள் துவரம் பருப்பை வழங்க உள்ளது. ஆனால் தற்பொழுது வரை மூவாயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வரும் பதினாறாம் தேதிக்குள் மீதமுள்ள 16 ஆயிரம் டன் என்பது சாத்திய மற்றது. தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளதால் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் சிவில் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் விரைவில் இறக்குமதி செய்யுமாறு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக கூறுகின்றனர்.