Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி வெந்தயம்!

#image_title

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி வெந்தயம்!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இது மாறிவரும் உணவு பழக்கம் ,வாழ்க்கை முறை மேலும் பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த சர்க்கரை நோயானது. நம் உடலில் இன்சுலின் சரிவர சுரக்காமல் இருப்பது அல்லது இன்சுலின் குறைவாக சுரப்பது அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் சரியாக வேலை செய்யாத இருப்பது போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் உண்டாகிறது. இந்த சர்க்கரை நோயை முற்றிலும் குணமாக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. 50 கிராம் அளவு வெந்தயத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த ஊற வைத்த வெந்தயத்தை ஒரு காட்டன் துணியில் போட்டு நன்றாக கட்டி ஒரு நாள் முழுவதும் வைக்க வேண்டும். ஒரு நாள் கழித்து பார்த்தால் இந்த வெந்தயமானது நன்றாக முளைக்கட்டி இருக்கும் .

பிறகு இந்த வெந்தயத்தை மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து பார்த்தால் நன்றாக காய்ந்திருக்கும். மேலும் கருஞ்சீரகம் 100 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். கருஞ்சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் இருக்கிறது. மேலும் உப்பு சேர்க்காத சுண்டைக்காய் வற்றல் 50 கிராம். இந்த சுண்டைக்காய் ஆனது குடலை முழுவதும் சுத்தம் செய்யும் புது ரத்தத்தை உற்பத்தி செய்யும் தன்மையும் மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும் தன்மையும் கொண்டது. மேலும் தைராய்டு பிரச்சினையை சரி செய்யும்.

மேலும் இந்த மூன்று பொருட்களையும் வறுக்காமல் அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதிலிருந்து 1/2 ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கலக்கி காலை, மாலை என இரு வேலையும் சாப்பிடுவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 அல்லது 15 நாட்கள் செய்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு முற்றிலும் குணமாகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நா வறட்சி, உடல் சோர்வு, தாகம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

Exit mobile version