Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

#image_title

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

நவீன காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை. ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை அடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. எனவே நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து பண வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தீபம்(லட்சுமி குபேர தீபம்) அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றி வழிபடுவது நல்லது.

இந்த தீபத்தை எந்த கிழமையில் வேண்டுமானாலும் ஏற்றலாம். வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை நாளில் இந்த தீபத்தை ஏற்றுவது நல்லது. முதலில் பூஜை அறையில் உள்ள லட்சுமி குபேர விளக்கை சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதில் தீப எண்ணெய் ஊற்றவும்.

பின்னர் ஏலக்காய் விதைகளை சேர்த்து, விளக்கு திரி ஒன்றை போட்டு விளக்கு ஏற்றவும். கடன் விரைவாக அடைய வேண்டும் என்றும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றும் மகாலட்சுமி தாயாரையும், குபேரரையும் மனதார நினைத்து வணங்க வேண்டும். இவ்வாறு தவறாமல் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நிச்சயம் கடன் பிரச்சனை நீங்கி பணம் பெருகும்.

Exit mobile version