Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு! இவர் தான் காரணம் ஹேமந்த் போட்டுடைத்த உண்மைகள்!

small-screen-serial-actress-chitra-suicide-case-he-is-the-reason-for-the-facts-that-hemant-put

small-screen-serial-actress-chitra-suicide-case-he-is-the-reason-for-the-facts-that-hemant-put

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு! இவர் தான் காரணம் ஹேமந்த் போட்டுடைத்த உண்மைகள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர் சித்ர. தற்போது சித்ராவிற்கு பிறகு காவ்யா நடித்து வந்தார்.ஆனால் இப்போது இந்த வாரத்தில் இருந்து லாவண்யா என்பவர் புதியதாக நடிக்க வருகின்றார்.

ஆனால் சித்ரா இருந்திருந்தால் இந்த கதாபாத்திரத்தை விட்டிருக்க மாட்டார் இன்னும் ஹிட்டாக்கி இருப்பார் என கூறப்படுகின்றது. அந்த அளவிற்கு சித்ரா முல்லையாகவே சீரியலில் வாழ்ந்திருப்பார் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகின்றது.சித்ராவிற்கும் ஹேமந்த் என்பவருக்கும் காதல் மலர்ந்தது அதனையடுத்து இரு வீட்டார் சமதத்துடன் நிச்சயமும் முடிந்தது.

இந்நிலையில் அவர் நட்ச்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.மேலும் சித்ரா தற்கொலை குறித்து வழக்கு இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இடையில் சில காலம் மௌனமாக இருந்த ஹேமந்த் இப்போது சித்ராவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கூற நான் தயார் எனவும் அதற்காக எனக்கு போலீசார் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். பிரபல தொகுப்பாளர் மற்றும்  அண்ணா நகரில் மெஸ் நடத்துபவர் தான் சித்ராவிற்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக ஹேமந்த் கூறியுள்ளார்.இந்த தகவல் உண்மையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version