தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! 

0
133

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்!

தக்காளி கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக்க, எலும்பை பலமாக்க ,நரம்புத் தளர்ச்சியைப் போக்க, தோலை பளபளப்பாக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.  பற்களும், சிரங்கு, சரும நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. தொற்று நோய்களைத் தவிர்க்கவும் வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் பயன்படுகிறது.

பெண்களுக்கு கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடலின் கனத்தைக் குறைக்கும் உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக தக்காளி செயல்படுகிறது.உடல் சோர்வு நீங்க : தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.

மேலும் தோல் நோய் குணமாக  நன்கு பழுத்த தக்காளி இரண்டு அல்லது மூன்று தக்காளி பலத்தை சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் நீங்க : காலை, மாலை இரு வேளைகள், இப்பழங்களை சாப்பிட்டு வாருங்கள், மலச்சிக்கல் அகன்று விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.