Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோட்டில் ராணுவ வீரர் திடீர் தூக்கு போட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் ராணுவ அதிகாரிகள்!..

Soldier suddenly hangs himself in Erode!! Military officers in shock!..

Soldier suddenly hangs himself in Erode!! Military officers in shock!..

ஈரோட்டில் ராணுவ வீரர் திடீர் தூக்கு போட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் ராணுவ அதிகாரிகள்!..

கேரள மாநிலம் திருச்சூர் கொங்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்பாத். இவருடைய வயது 37. இவர் நேற்று முன்தினம் ஈரோட்டிற்கு வந்திருந்தார். பிறகு ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிவுள்ளார்.

நேற்று மதியம் லாட்ஜ் ஊழியர் ஒருவர் சுனில்பாத் தங்கியிருக்கும் அறையை எட்டிப் பார்த்தார். அப்போது சுனில்பாத் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு லார்ஜ் உரிமையாளரிடம் தகவல் கொடுத்தார்.

தகவலின் பெயரில் லார்ஜ் உரிமையாளர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் வீரப்பன்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சுனில்பாத் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

பிறகு சுனில் பாத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுனில்பாத் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? குடும்ப பிரச்சினையின் காரணமாக? வேறு ஏதாவது காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version