Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொண்டை புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரு இரவில் குணமாக இந்த பவர் புல் கஷாயத்தை செய்து அருந்துங்கள்!!

#image_title

தொண்டை புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரு இரவில் குணமாக இந்த பவர் புல் கஷாயத்தை செய்து அருந்துங்கள்!!

குடலில் புண் இருந்தால் அவை வயிற்றுப்புண், தொண்டைப்புண், வாய்ப்புண்ணாக வெளிப்படக் கூடும். மோசமான உணவுமுறை பழக்கத்தால் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது. காலை நேர உணவை தவிர்ப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதை சரி செய்ய அகத்தி கீரையில் கசாயம் செய்து சாப்பிட்டு வரலாம். இதனால் சில தினங்களில் வயிற்றுப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

*அகத்தி கீரை – 1 கைப்பிடி அளவு

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*மஞ்சள் – சிட்டிகை அளவு

*பூண்டு – 1 பல்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு அகத்தி கீரை சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள், 1 பல் இடித்த பூண்டு மற்றும் 1/4 தேக்கரண்டி இடித்த சீரகம் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி பருகவும். இதை காலை நேரத்தில் பருகுவது நல்லது. இவ்வாறு வாரத்தில் 3 முறை பருகி வந்தால் தொண்டை புண் மற்றும் வயிற்றுப்புண் பிரச்சனை விரைவில் சரியாகும்.

Exit mobile version